திருச்சி: கவிழ்ந்து கிடந்த மணல் லாரி மீது அரசு பஸ் மோதி 10 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் அரசுப் பேருந்து ஒன்று மணல் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தம் அருகே மணல் லாரி ஒன்று பாரம் தாங்காமல் தடம் புரண்டு, கவிழ்ந்து கிடந்தது. இந்நிலையில் இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் கவிழ்ந்திருந்த மணல் லாரி மீது வேகமாக மோதியது.

இதில் அப்பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணல் லாரி அருகே வந்தபோது அரசுப் பேருந்தின் பிரேக் சரியாக வேலை செய்யாததே இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications