செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்!
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை வலியிறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000 செவிலியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை.
இதுவரை அவர்களுக்கு தொகுப்பு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் ஆகியும்கூட தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாததால் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்
செவிலியர்கள் பிரச்சனையில் உண்மையை உணராமல் அரசியல் கட்சிகள் கருத்து கூறுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். செவிலியர்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அவரசக்கோலத்தில் கருத்து தெரிவிப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

இந்த மாதம் பணி நியமனம்
நீதிமன்ற வழக்குகளால் செவிலியர்களின் பணி நியமனம் தாமதமானதாகவும் அவர் கூறினார். இந்த மாதம் 800 முதல் 1000 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

காலியிடங்களை பொறுத்து நிரந்தரம்
மேலும் 2 ஆண்டுகளுக்கு செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பது வழிமுறை என்றும் அவர் கூறினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு காலியிடங்களை பொறுத்து அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தனியார் கல்லூரி செவிலியர்களும்
தமிழகத்தில் மட்டும் தான் செவிலியர்கள் அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரியில் படித்தவர்களுக்கும் பணிநியமன ஆணை தரப்படுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications