உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு... ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
உடலை ஆரோக்கியமாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் உடலை திடகாத்திரமாக வைத்திருந்தால் மட்டும் பதவி உயர்வு வழங்கலாம் என்ற உத்தேச திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளது.
போலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும் பணியில் சேரும் போது அங்கு அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் தங்கள் உடலை நல்ல விதத்தில் பேணி பாதுகாக்கின்றனர். அவர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.

எனவே போலீஸார் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்காக புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
அது என்னவென்றால், ஐபிஎஸ் அதிகாரிகள் இனி தங்கள் உடலை திடமாக வைத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே துணை ராணுவப் படையில் நடைமுறையில் உள்ளது. இங்கு உடலை மிகவும் உறுதியாக வைத்து 'ஷேப்-1' என்ற சான்றிதழ் பெறுபவர்களே பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் ஆவர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடல் தகுதி தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதிதாக சேருபவர்களுக்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications