ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சாய கழிவுநீர் கலந்த பாட்டிலுடன் பொதுமக்கள் வந்தனர்.
ஈரோடு: சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் புகாரளிக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2300-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். இந்த தொழில்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள். கண்ணாடி தொழிற்சாலை டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நிலத்தடியில் தொழிற்சாலைகள் திறந்துவிடுவதால் சிப்காட்டை சுற்றியுள்ள எழுதிங்கள்பட்டு , செங்குளம், காசிப்பில்லாம்பாளையம், ஓடைக்காட்டூர்குள்ளம்பாளையம், ஈங்கூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் முற்றிலுமாக மாசு அடைந்து மனிதர்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் , சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியரிடம் தாங்கள் கொண்டு வந்த புகார் மனுவினை அளித்தனர்.
சிப்காட் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலையின் கழிவுநீர் தொடர்ந்து நிலத்தடியில் கலந்து வருவதாகவும், இரவு நேரங்களில் சிப்காட்டியில் இயங்கிவரும் டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலையின் புகையினால் மூச்சுதிணறல் ஏற்படுவதாகவும் கடந்த சில மாதங்களில் மட்டும் 15- மேற்பட்டோர் தொழிற்சாலையின் கழிவுகளினால் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதற்கு மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications