ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சாய கழிவுநீர் கலந்த பாட்டிலுடன் பொதுமக்கள் வந்தனர்.
ஈரோடு: சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் புகாரளிக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2300-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். இந்த தொழில்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள். கண்ணாடி தொழிற்சாலை டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நிலத்தடியில் தொழிற்சாலைகள் திறந்துவிடுவதால் சிப்காட்டை சுற்றியுள்ள எழுதிங்கள்பட்டு , செங்குளம், காசிப்பில்லாம்பாளையம், ஓடைக்காட்டூர்குள்ளம்பாளையம், ஈங்கூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் முற்றிலுமாக மாசு அடைந்து மனிதர்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் , சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியரிடம் தாங்கள் கொண்டு வந்த புகார் மனுவினை அளித்தனர்.
சிப்காட் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலையின் கழிவுநீர் தொடர்ந்து நிலத்தடியில் கலந்து வருவதாகவும், இரவு நேரங்களில் சிப்காட்டியில் இயங்கிவரும் டயர்களை உருக்கி ஆயில் எடுக்கும் தொழிற்சாலையின் புகையினால் மூச்சுதிணறல் ஏற்படுவதாகவும் கடந்த சில மாதங்களில் மட்டும் 15- மேற்பட்டோர் தொழிற்சாலையின் கழிவுகளினால் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதற்கு மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications