இவங்கெல்லாம் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.... எச். ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா?
தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற பொன் ராதாகிருஷ்ணன் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே கடந்த 2-ஆம் தேதி 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். ஒரே நேரத்தில் இதுவரை அத்தகைய எண்ணிக்கையில் ரவுடிகளை கைது செய்தது இல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து ரவுடிகளின் தலைவனான பினு தப்பியோடிவிட்டு கடந்த ஒரு வாரம் கழித்து போலீஸில் சரணடைந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்து பதிலடிக் கொடுக்கும் விதமாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறுகையில் , தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை என்ற பொன். ராதா கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஓபிஎஸ்ஸின் பெயரை நேரடியாக கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications