நீட்: தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில தேர்வு மையம்- சிபிஎஸ்இ உத்தரவு அதிரடி ரத்து
தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சிபிஎஸ்இ உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சிபிஎஸ்இ உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்துக்கு இது இன்னொரு அநீதியாக பார்க்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில்தான் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்த சிபிஎஸ்இ உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவையே அறிவிப்பாக இணையத்தில் உடனே வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications