ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை- உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை தர உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதி சத்யநாராயணா விசாரித்தார். அப்போது, திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கபட வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் விவரம் மற்றும் நிகழ்ச்சி நிரலை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications