இளவரசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த 100 பேருக்கு மட்டும் அனுமதி- அரசியல்வாதிகள் வரக் கூடாது!
சென்னை: தர்மபுரி இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இளவரசனின் தந்தை உள்பட 100 பேருக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அது தெரிவித்துள்ளது.
தருமபுரி இளவரசனின் முதலாவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி அவரது தந்தை டி. இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி எனது மகன் இளவரசன் மர்மமான முறையில் உயிரிழந்தான். போலீஸ் தரப்பில் அது தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எனது மகன் இறந்து ஜூலை 4-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இளவரசனின் நினைவு தினத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர், அவனது நண்பர்கள், கிராம மக்கள் உள்பட பலர் விருப்பம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், ஆர்டிஓ ஆகியோரிடம் விண்ணப்பித்தோம். ஆனால், அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே, எனது மகனின் முதாலவது ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஆர்டிஓ பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும். அதில், மனுதாரர், அவரது குடும்ப உறுப்பினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் ஆகியோரில் 50 பேரை ஜூலை 4-ஆம் தேதி மாலை 3 முதல் 4 மணி வரை அனுமதிக்க வேண்டும். மேலும், கிராம மக்களையும் ஆர்டிஓ அனுமதிக்கலாம். அவர்களும் 50 பேர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் ஒரே வரிசையாக மட்டும் செல்ல வேண்டும். அரசியல் தலைவர்கள் வரக் கூடாது. பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications