தமிழக அரசின் இலவச வேட்டி சேலை ஒப்பந்தம் ரத்து: ஹைகோர்ட் உத்தரவு
இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதிய டெண்டரை கோரலாம் என்று நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
பிற மாநில நிறுவனங்களை ஒப்பந்தத்தில் பங்கேற்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை யொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப் பாணையை தமிழக அரசு கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை மில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அந்த திட்டத்துக் கான நூல் கொள்முதல் டெண்ட ரில், மாசு கட்டுப்பாடு வாரியத் திடம் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் சான்றிதழ் பெற்ற நூற்பு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையால் அகில இந்திய அளவில் நடக்கும் டெண் டரில் ஜீரோ - டிஸ்சார்ஜ் பெறாத மற்ற நூற்பு நிறுவனங்களால் பங்கேற்க முடியாது.
எங்களது நிறுவனம் சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால், அகில இந்திய அளவில் ஜீரோ - டிஸ்சார்ஜ் யூனிட் சான்றிதழ் கொண்ட சாயக் கழிவு ஆலைகள் மற்றும் நூற்பு ஆலைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் சாயக்கழிவு நீர் கடலில் கலக்க அனுமதி உள்ளது. எனவே, இந்த ஒரு நிபந்தனையின் மூலம் இலவச வேட்டி, சேலை டெண்டரில் பெரும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதலுக்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.துரை சாமி முன்பு கடந்த ஜூலை 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 13ஆம் தேதி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதி உத்தர விட்டார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்ட ஒப்பந்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இலவச வேட்டி சேலை திட்ட ஒப்பந்தத்தில் விதிகளை பின்பற்றவில்லை என்று தீர்ப்பில் நீதிபதி துரைசாமி கூறினார். தமிழக அரசு புதிய ஒப்பந்தம் கோரலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications