இப்பவே கண்ணைக் கட்டுதே... வெயிலின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருமாம்!
சென்னை: இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னை, திருத்தணி, வேலூர், கடலூர், கரூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரியில் அதிகளவு வெயில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்த போதும், வெப்பத்தின் அளவு குறையவில்லை. நேற்று வேலூரில் 2 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் கடல் காற்று தாமதமாக வருவதுதான். இதனால் வெப்பம் அதிகம் உணரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இன்னும் அதிகமாக வெப்பம் நிலவுகிறது. வெப்ப சலம் காரணமாக மழை பெய்தாலும் அதற்கு மறுநாள் மீண்டும் வெயில் உச்சத்துக்கு சென்று விடுகிறது. தென் மேற்கு பருவக்காற்று வீச தொடங்கினால்தான் இனி வெப்பம் குறையும்' என்றார்.












Click it and Unblock the Notifications