கடல் காற்று வீசுகிறது... தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்... ரமணன் தரும் 'ஜில்' நியூஸ்
சென்னை: கடல் காற்று நிலத்தை நோக்கி வீசத் தொடங்கி இருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தன்மை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. இப்போதே பல இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் 102 டிகிரியை தாண்டியது. சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.
இந்நிலையில், நேற்று திடீரென வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த வெயில் குறைவிற்குக் காரணம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடல்காற்று வீசாமல், தென்மேற்கு திசையில் இருந்து வீசியது. அதன் காரணமாக வெயிலின் அளவு அதிகரித்தது.
வியாழக்கிழமை (நேற்று) முதல் தெற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி இருக்கிறது. தென்கிழக்கு திசையில் இருந்தும் கடல் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை நகரிலும், கடலோர மாவட்டங்களிலும் வரும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறையும். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் சிறிது குறையும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications