மஸ்கட் சென்ற மகனை காணவில்லை: மீட்டுத் தரக் கோரி தாய் கண்ணீர்
தஞ்சை: மஸ்கட்டிகற்கு வேலைக்கு சென்ற மகன் குறித்த தகவல் எதுவும் இல்லாததால் அவரை மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர் மல்க மனுக்கள் அளித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சி வடபாதி கள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீராச்சாமி, சந்திரா தம்பதி. கடந்த 26ம் தேதி மதுக்கூர் தமுமுக அலுவலகத்திற்கு சென்ற சந்திரா தனது மகன் மஸ்கட் சென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த தகவலும் இல்லை. இதன் காரணமாக எனது கணவர் மனநிலைப்பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து கடந்த 27ம் தேதி சந்திரா அவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகனை மீட்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு சந்திரா சார்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மனுவில் சந்திரா கூறியிருப்பதாவது,
எனது மகன் முத்துக்குமார் கடந்த 2002 ஆம் ஆண்டு மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். பின்னர் இரண்டு முறை தபாலில் தொடர்பு கொண்டார். எனது மகனின் கடிதம் கடைசியாக கடந்த 07/05/2002 அன்று வந்தது. அதன் பின்னர் இன்றுவரை எனது மகனை பற்றி எந்தவித தகவலும் இல்லை. எனது மகனை இந்திய தூதரகம் மூலமாக மீட்டுத்தாருங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மனுக்களை கொடுத்துவிட்டு சந்திரா வெளியில் வந்தபோது அவர் கூறுகையில்,
நான் எல்லோரிடமும் எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கச் சொல்லினேன். யாரும் காது கொடுத்து கேட்கவில்லை இந்த முஸ்லிம் பாய்கள் இன்று கலெக்டர் ஐயாவிடம் மனு கொடுக்க செய்து இருக்கின்றார்கள் என்று அழுது கொண்டே கூறினார்.
அவருடன் மதுக்கூர் நகர தமுமுக தலைவர் ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் கேடிஎம் நிஷார் அகமது, நஸாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அன்பான மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களே! முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் சந்திரா என்ற தாயின் மகனை மீட்க.
பெயர் : முத்துக்குமரன்/ வீராசாமி(MUTHU KUMARAN/VEERASAMY)
பாஸ்போர்ட் எண் : ஏ3949059
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications