பாதள சாக்கடையை மனிதர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் விவகாரம் – தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: பாதாள சாக்கடைகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாதாள சாக்கடைகளை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேன்ஞ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில், தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடையில் கோழி கழிவுகள் உட்பட, பல்வேறு கழிவுகள் கலக்கும் நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களை கொண்டு அவற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதாக தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு குறித்து வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications