பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து.. ஹைகோர்ட் கிளை உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மரக்காணத்தில் 2013-ல் நடைபெற்ற மோதல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
திருச்சி சிறையில் இருந்து 11.5.2013-ல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது சிறை வாயிலில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்றார்.
இதற்காக திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ராமதாஸ் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அவரது பேச்சுக்கள் அவதூறு சட்டத்துக்கு உட்படாது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். பின்னர், திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications