சுட்டெரிக்கும் வெப்பம்... தமிழகத்தின் 7 நகரங்களில் சதமடித்த கோடை வெயில்: சேலத்தில் 103 டிகிரி !
சென்னை: கோடை வெயில் துவங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் 7 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவானது. இதில் சேலத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதத்திலேயே தொடங்கியுள்ள வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிற்பகல் முதலே அனல் காற்றின் தாக்கமும், புழுக்கமும் காணப்படுகிறது. கடந்த இரு வாரமாக, பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இன்று பதிவாகியது. அடுத்து வரும் 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.
அதே நேரத்தில் வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)
சேலம் - 103
மதுரை - 100
கரூர் பரமத்தி - 100
பாளையங்கோட்டை - 100
தருமபுரி - 100
வேலூர் - 100
கோவை - 100
திருச்சி - 99
சென்னை மீனம்பாக்கம் - 93












Click it and Unblock the Notifications