விட்டாச்சு லீவு! தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. மாவட்ட நிர்வாகம்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது.

tenkasi school holiday

அந்த வகையில், கடந்த 20 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தான், வாக்காளர் முகாம்கள் நடைபெற உள்ளதால் வேலை நாளாக அறிவிக்கப்பட்ட இன்று விடுமுறை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், சரிபார்ப்பு முகாம்கள் நடைபெறுவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இதற்கு பதிலாக வரும் 30 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+