சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் காரணமாக 12-ந் தேதி நேற்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மிலாது நபி தினத்துக்கு அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் 13-ந் தேதியன்றும் (இன்று) தொடர்ந்து மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.