பள்ளிவாசலில் பெண் குழந்தையை கடத்திய இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. தென்காசி போலீஸ் அதிரடி
பள்ளிவாசலில் குழந்தையை கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
தென்காசி: 3 வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற, குற்றவாளியை தென்காசி போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது - நாகூர் மீராள் தம்பதிகள். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.
கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தன்னுடைய குடும்பத்துடன், திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார்.

குழந்தை
அன்றைய தினம் இரவு தம்பதிகள் அங்கேயே தங்கினார்கள்.. தம்பதிக்கு நடுவில் குழந்தை தூங்கி கொண்டிருந்தாள்.. 12-ந்தேதி அதிகாலை, ஒரு மர்ம நபர் அங்கு வந்து, குழந்தையை கடத்தி கொண்டு போய்விட்டார்... தூங்கி எழுந்து பார்த்தபோது, குழந்தை காணாததால், தம்பதிகள் பதறினர்.. அந்த பகுதி முழுக்க தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், இதுகுறித்து கூடங்குளம் போலீசாரிடம் புகார் செய்தனர்.

திருச்செந்தூர்
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், மர்ம நபர் குழந்தையை தூக்கிக்கொண்டு சாலையோரமாக செல்வது பதிவாகியிருந்ததை கண்டனர்... அதனால், அன்றைய நாள் முழுக்க இளைஞரை தேடும் பணி தீவிரமானது.. ஆனால், அந்த இளைஞரோ, குழந்தையை திருச்செந்தூரிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.. இறுதியில் குழந்தையை மீட்ட போலீசார், அதை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்..

தனிப்படைகள்
எனினும் குழந்தை பாத்திமாவை கடத்தியது யார் என்ற விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தேடுதல் வேட்டை ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த இளைஞர் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு ஒரு தனிப்படை விரைந்தது... சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கேரளாவிலேயே முகாமிட்டது..

பள்ளிவாசல்
ஒருவழியாக, தனிப்படையினர் நேற்றிரவு குழந்தையை கடத்தி சென்ற அந்த நபரை கண்டுபிடித்தனர்.. உடனே அவரை பிடித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையும் ஆரம்பமானது.. அந்த நபர் பாலக்காட்டை சேர்ந்தவர், முகமது பருக் என்பது பெய.. 34 வயதாகிறது.. சம்பவத்தன்று ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழுத்தில் கிடந்த நகையை பார்த்துள்ளார்.. அந்த நகையை திருடவே அன்றைய தினம் இரவு அங்கேயே தங்க திட்டமிட்டார்..

கவரிங்
இரவு நேரம் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தபோது, குழந்தையை தூக்கி கொண்டு சென்றுள்ளார்.. திருச்செந்தூருக்கு கடத்தி வந்த பிறகு, கழுத்தில் கிடந்த செயினை கழட்டினார்.. அப்போதுதான் அது கவரிங் என்றே தெரிந்தது.. அதனால், ஏமாந்துபோன முகமது பருக் குழந்தையை, அங்கேயே விட்டுவிட்டு தப்பியுள்ளார்.. இது அத்தனையும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார், முகமது பருக்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications