சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தினகரன் மட்டும் தப்பியது ஏன்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முதலில் டிடிவி தினகரனும் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜெயலலிதா சொத்துக்களின் ஒன்றாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதில் ஒன்றுதான் லண்டனில் உள்ள காப்ஸ் கிராப்ட் ஹோட்டல் . இதை வாங்கி நடத்திய ஐந்து பேரில் தினகரனும் ஒரு பார்ட்னர்.
ஜெயலலிதா சேர்த்த சொத்துகள் பட்டியலில் நல்லம்ம நாயுடு லண்டன் ஹோட்டலையும் சேர்க்கலாம் என்று சொன்ன யோசனையின் பேரில் அதையும் சேர்த்தார்கள்.

ஆனால் டிடிவி தினகரனை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி அருணாச்சலம் கூறிவிட்டார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. இந்த ஒரு சண்டை காரணமாக பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு நான்கு ஆண்டுகள் தாமதம் ஆனது.
அதன் பிறகு, அப்படிச் சேர்த்தால் இந்த வழக்கின் போக்கு மாறிவிடும் என்பதை உணர்ந்த அரசுத் தரப்பு, தானே முன்வந்து லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் தினகரன் இதிலிருந்து தப்பினார்.












Click it and Unblock the Notifications