கூடங்குளம் அருகே மீண்டும் குண்டு வீச்சு- 30க்கும் மேற்பட்ட குண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடி: கூடங்குளம் அருகே கூத்தன்குழியில் மீண்டும் சராமரியாக வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகளுககு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013ல் செப்டம்பரில் இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த போது அவை திடீரென வெடித்து சிதறின. இதில் 7 பேர் பலியாகினர்.

போலீசார் சோதனை நடத்த போவதாக வந்த தகவலை அடுத்து அதனை பதுக்கி வைத்திருந்தவர்கள் பல வெடிகுண்டுகளை கடலில் வீசி அழித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி இடிந்தகரை சவேரியர் கோயிலில் அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டியினர் மோதி கொண்டனர். இதில் சராமரியாக வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதுபோல் மாலையிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வழக்கம் போல் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொண்டனர். இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கூத்தன்குழியில் சுதாகர், சிலுவை சித்தேரியன் ஆகியோர் இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். சுதாகர் அங்குள்ள தனியார் தாது மணல் ஆலையில் வேலை செய்து வருகிறார். தாது மணல் ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டியினர் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரில் சடங்கு நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாலையில் கூத்தன்குழி பாத்திமா நகர் பகுதியில் இரு கோஷ்டியினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். சுமார் 50 குண்டுகள் வரை வீசப்பட்டன.
இதில் அதே பகுதியை சேர்ந்த மதன், ரீகன் காயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி நரேந்திரன் நாயார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கூத்தன்குழியை சேர்ந்த பிரான்சிஸ், இருதயம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் எஸ்பி தலைமையில் போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள முட்செடிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications