Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- போலீஸ் விசாரணை

கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- வீடியோ

    கரூர்: கரூர் அருகே கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கணேசன். இவருக்கு வயது 50. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

     Husband and wife committed suicide near Karur

    இவர்களது மகன் சுந்தரம் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து சுந்தரம் உள்ளே சென்றார்.

    உள்ளே சென்று பார்த்த போது தம்பதியினர் இருவரும் கேபிள் வயர் மற்றும் மின்சார ஒயரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இதனையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட தம்பதியினருக்கு சுந்தரம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+