கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- போலீஸ் விசாரணை
கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கரூர்: கரூர் அருகே கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கணேசன். இவருக்கு வயது 50. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களது மகன் சுந்தரம் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து சுந்தரம் உள்ளே சென்றார்.
உள்ளே சென்று பார்த்த போது தம்பதியினர் இருவரும் கேபிள் வயர் மற்றும் மின்சார ஒயரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரத்தின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதனையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட தம்பதியினருக்கு சுந்தரம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications