சாப்பிடும் போது இழுத்து சென்றார்கள்.. எங்கே என்று தெரியவில்லை.. கவுதமன் மனைவி கண்ணீர் பேட்டி
சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். அவரை எங்கு அழைத்து சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.
காவிரிப் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு நிலவியது. இதில் போராடியவர்களை தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதில் போராடியதற்காக தற்போது இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது குறித்து கவுதமன் மனைவி மல்லிகா பேட்டியளித்துள்ளார். வீட்டில் சாப்ப்பிட்டிகொண்டு இருந்தவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அதில், அப்போதுதான் வீட்டிற்கு வந்து அவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். சரியாக 2.30 மணி இருக்கும். அப்போது வீட்டிற்குள் வேகமாக போலீஸ் வந்தார்கள். சரியாக்க 12 பேர் வந்தனர். டிஎஸ்பி கூப்பிட்டதாக கூறினார்கள்.
என் கணவர் சம்மன் இருக்கிறதா என்று கேட்டதற்கு, சம்மன் இல்லை, டிஎஸ்பிதான் கூப்பிட்டாங்க, என்று கூறிவிட்டு சுற்றி நின்றார்கள். சும்மா விசாரணைதான் வாருங்கள் என்று கூறினார்கள். என் கணவர் சாப்பிட்டுவிட்டு வரலாமா என்று கேட்டார்.
அதற்கு சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் சாப்பிட சொல்லிவிட்டு அவரை சாப்பிட விடாமல் போலீஸ் சுற்றி வளைத்துக் கொண்டது. ஒரு தீவிரவாதியைப் போலீஸ் என கணவரை நடத்தியது. பின் சாப்பிடவிடாமல் அவரை இழுத்து சென்றனர்.
அவரை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று சொல்லவில்லை. எதற்காக என்றும் சொல்லவில்லை. இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கேட்ட போது கூட சொல்லவில்லை. விசாரணை என்று மட்டும் சொன்னார்கள், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்கள், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications