இதுவரைக்கும் என்ன ஒரு வார்த்தை வான்னு கூப்படலைங்க.. டிடிவி தினகரன் குமுறல்!
அதிமுகவின் இப்தார் நோன்பு திறப்பு தொடர்பாக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை தனக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்கே நகர் தேர்தல் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரனையும் அழைக்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

நிராகரித்த முதல்வர்
ஆனால் அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பொதுச்செயலாளர்தான்..
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார் என்றார். பொதுச் செயலாளர் முடிவுக்கு 122 எம்.எல்.ஏக்களும் கட்டுப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

நண்பனாகவே நினைக்கிறேன்..
எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் தங்களின் நிலையை விரைவில் மாற்றிக் கொள்வார்கள் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். 122 எம்.எல்.ஏக்களையும் நான் நண்பனாகவே நினைக்கிறேன், அவர்கள் யாருக்கோ பயப்படுகிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

இதுவரை அழைப்பு வரவில்லை
கட்சி நடத்தும் இப்தார் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் கூவத்தூரில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

எந்த விசாரணைக்கும் தயார்
பேர விவகாரம் குறித்து ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார் என்ற அவர் எங்களுக்கு மடியில் கணமில்லை என்றும் கூறினார். ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications