சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்: ஸ்டாலின்
சென்னை: சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கி வீரமரணம் அடைந்தனர். அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளது:
சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையின்படி அங்கு இறந்த 10 ராணுவ வீரர்களில் 4 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தங்கள்இன்னுயிரை இழந்துள்ள தமிழக வீரர்களான லான்ஸ் ஹவில்தார் குமார் (தேனி மாவட்டம்), ஹவில்தார் எழுமலை (வேலூர் மாவட்டம்), சிப்பாய் கணேசன் (மதுரை), சிப்பாய் ராமமூர்த்தி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகியோருக்கும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் சூர்யவன்ஷி, சுதீஷ், நாகேஷா, மகேஷா, ஹனமந்தப்பா, முஷ்டாக் அஹமது ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைப் பாதுகாக்கும் மகத்தான பணியில் உயிரிழந்துள்ள அந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து, அஞ்சலி செலுத்துகிறேன்.. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்...
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications