என்ன பொசுக்குன்னு தமிழிசையை பற்றி இப்படி சொல்லிட்டாரு தினகரன்!
Recommended Video

பெங்களூர்: தமிழிசை யார்.. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் இன்று பேட்டியளித்தார்.
பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் தினகரன் பேட்டியளித்தார்.

அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, எங்கள் கொள்கை மதசார்பின்மை. மத நல்லிணக்கத்தை விரும்பும் கட்சி நாங்கள். ஜாதி மத வேறுபாடு இல்லாத கட்சி நாங்கள். எனவே அவர்கள் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராது.
நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது. தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். நான் 1999ம் ஆண்டு எம்.பியாக இருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்துள்ளேன். சி.பி.ராதாகிருஷ்ணனை கூட பார்த்துள்ளேன். இப்போதுள்ள பாஜக தலைவர்கள் யாரையும் பார்த்தது இல்லை. திமுகவுடன் சேருவதற்குப் பேசாமல் அரசியலை விட்டுப் போய் விடலாம்.
எங்கள் குடும்பத்தை பற்றி பன்னீர் செல்வம் தப்பாக பேசியவர்தான். இருந்தாலும், அவராக மன்னிப்பு கேட்டு வந்ததால் பேசினேன். ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சேருவது என்பது தற்கொலை முடிவு. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க தினகரன், தூதுவிட்டார் என தமிழிசை இன்று பேட்டியொன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications