Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்!

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொடூரமாக கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை என அவரது பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொடூரமாக கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை என அவரது பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதல் வெறியால் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த 30ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை குடும்பத்தினர் கொலை செய்யும் வேட்டையில் இறங்கினார்.

இதில் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜயை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றார் அபிராமி.

விடிய விடிய ஜாலி

விடிய விடிய ஜாலி

கணவர் விஜயை கொல்ல காத்திருந்த அவர், கணவர் வீட்டிற்கு வராததால் கள்ளக்காதலனிடம் குழந்தைகளை கொன்ற விஷயத்தை கூறினார். பின்னர் இனி எந்த தொல்லையும் இல்லை என சுந்தரத்தின் வீடு அமைந்துள்ள பகுதியில் விடிய விடிய உடலுறவில் ஈடுபட்டனர்.

அபிராமி கைது

அபிராமி கைது

பின்னர் யாருக்கும் தெரியாமல் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவில் புறப்பட்ட அவர் அங்கிருந்த கேரளா சென்றார். அதற்குள் குட்டு உடையவே சுந்தரத்துடன் நாகர்கோவில் புறப்பட்ட போலீஸ் சுந்தரத்தை வைத்தே அபிராமியை கைது செய்தது.

தவிக்கும் கணவர்

தவிக்கும் கணவர்

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தான் செய்த கொடூம் செயலை நினைத்து சக கைதிகளிடம் புலம்புவதாக கூறப்படுகிறது. அபிராமியின் கொடூர செயலால் குழந்தைகளை இழந்து தவித்து வருகிறார் அவரது கணவர் விஜய்.

ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க

ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க

அதேபோல் அபிராமியின் பெற்றோரும் பேரக்குழந்தைகளை இழந்து பித்துப்பிடித்தது போல் உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமிக்கு ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க போவதில்லை அபிராமியின் பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் கேட்க மாட்டேன்

ஜாமீன் கேட்க மாட்டேன்

அபிராமி ஜெயிலில் இருப்பது அவள் செய்த தவறுக்கான தண்டனை. தன் பேரப்பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு தண்டனை தேவைதான். அவளுக்காக நான் ஜாமீன் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்று அபிராமியின் தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+