எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாகை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன் விழா சென்னை வைஎம்சிஏ மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.
[யாரை லஞ்ச ஆட்சி என்கிறீர்கள்? அரசை விமர்சித்தால் நாக்கை அறுப்பேன்.. அமைச்சர் சர்ச்சை பேச்சு! ]
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அவசியம் இல்லை
இந்நிலையில் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் நாகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார்.

அதைவிட பாவம் இல்லை
அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே. அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. 33 அமைச்சர்களை சேர்ப்பதற்கு பதில் அரசியலை விட்டு போய்விடலாம்.

டெபாசிட் வாங்காது
திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? அதிமுக திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் டெபாசிட் வாங்காது.

எங்கள் தொண்டரை ஜெயிக்கட்டும்
திமுக,காங்கிரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என அதிமுக கூறிக்கொண்டு என்னைப் பற்றிதான் அத்தனை மேடைகளிலும் பேசினார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தொண்டர் ஒருவரை ஜெயிக்கட்டும் பிறகு என்னை பார்க்கலாம்.

இடைத்தேர்தலில் ஜெயிக்கட்டும்
அதிமுக திமுக முடிந்தால் இடைத்தேர்தலில் எங்களை ஜெயித்து பார்க்கட்டும். அதிமுக திருவாரூரில் டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் டெபாசிட் வாங்க விடமாட்டோம்.

வீரர் போன்று பேசுகிறார்
அதிமுகவை 33 அமைச்சர்களும் டெண்டர் கம்பெனி போல் நடத்துகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது கோழை தனத்தை மறைக்கவே வீரர் போன்று பேசுகிறார். இவ்வாறு டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications