எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நெல்லை நீதிபதி எச்சரிக்கை
எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் நீதிபதி எச்சரிக்கைவிடுத்துல்ளார்.
Recommended Video

திருநெல்வேலி: நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருடைய கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் பலரும் எஸ்.வி.சேகரின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இதே பிரச்னை தொடர்பாக, திருநெல்வேலியைச் சேந்த பத்திரிகையாளர் ஐ.கோபால்சாமி திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று திங்கள்கிழமை திருநெல்வேலி முதலாவது நடுவர் மன்றத்தில் நீதிபதி ராம்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரின் சார்பில் ஆஜரான ஹரி என்ற வழக்கறிஞர் "எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதி ராம்தாஸ் வருகிற ஜூலை 12 ஆம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடி ஆணை பிறக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால், தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர் வருகிற ஜூலை 12 ஆம் தேதி திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications