எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நெல்லை நீதிபதி எச்சரிக்கை
எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் நீதிபதி எச்சரிக்கைவிடுத்துல்ளார்.
Recommended Video

திருநெல்வேலி: நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருடைய கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் பலரும் எஸ்.வி.சேகரின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இதே பிரச்னை தொடர்பாக, திருநெல்வேலியைச் சேந்த பத்திரிகையாளர் ஐ.கோபால்சாமி திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று திங்கள்கிழமை திருநெல்வேலி முதலாவது நடுவர் மன்றத்தில் நீதிபதி ராம்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரின் சார்பில் ஆஜரான ஹரி என்ற வழக்கறிஞர் "எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதி ராம்தாஸ் வருகிற ஜூலை 12 ஆம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடி ஆணை பிறக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால், தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர் வருகிற ஜூலை 12 ஆம் தேதி திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications