பயங்கர சூறாவளியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்....
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், நம்பியூரில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் 22 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்தன.
நம்பியூர், செட்டிபாளையம் பகுதியில் சூறாவளியுடன் பெய்த பலத்த மழையால், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத் தார்கள், குலையுடன் முறிந்து மண்ணில் சாய்ந்தன.
இப்பகுதியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 22 ஏக்கர் பரப்பில் இருந்த வாழை மரங்கள் நாசமானதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், 4-ந்தேதி ஆன பின்னும் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்க்குமா என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் மேல்மட்டத்தில் காற்று வீசுவது தொடர்ந்து நீடித்தால் இன்னும் 48 மணி நேரத்தில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications