ஆர்கே நகர் தேர்தல் வன்முறை: ஓபிஎஸ் மகனை கைது செய்ய ஹைகோர்ட் தடை!
ஆர்கே நகர் தேர்தல் வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் அவரது தம்பி ராஜாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மகன் மற்றும் அவரது தம்பி ராஜாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆர்கே நகர் காவல் ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

ஆனால் வருமான வரித்துறை ரெய்டின் போது வாக்காளர்களுக்கு டிடிவி.தினகரன் குரூப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில் அண்மையில் ஆர்கே நகரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஓபிஎஸ் தரப்புக்கும், டிடிவி.தினகரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவிந்திர நாத், சகோதரர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் முன்ஜாமின் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஆர்கே நகர் இன்ஸ்பெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications