ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் டிடிவி தினகரன்?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை மதுசூதனன் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி இரட்டை இலைச் சின்னத்தையும் அஇஅதிமுக என்ற பெயரையும் மதுசூதனன் அணியினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு பின்னடைவு
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னமும் கட்சியும் நழுவியிருப்பது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியிடவுள்ள டிடிவி
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவார்?
இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்துக்கு போனாலும் டிசம்பர் மாதத்துக்குள் சாதமாக முடிவு கிடைக்கும் என்பது சாத்தியமில்லை.

தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது
ஆகையால் தினகரன் சுயேட்சை வேட்பாளரைப் போல் ஏதாவது ஒரு சின்னத்தில் தான் போட்டியிட முடியும். கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டு டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இரட்டை மின்விளக்கு சின்னமா?
இந்நிலையில் மீண்டும் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்ட, பார்ப்பதற்கு இரட்டை இலை போன்று தோன்றிய இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications