15 ஆண்டுகளாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்ல முடியாமல் திணறும் இந்தியா
சென்னை: கோடானு கோடி அழகிகள் வசிக்கும் இந்தியாவில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் ஒருவர் கூட பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வெல்லவில்லை.
2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதெலா கலந்து கொண்டார். போட்டியில் இந்தியா உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்.

தவறு
பிரபஞ்ச அழகியா பியா தேர்வாகியிருந்தும் நிகழ்ச்சியை நடத்திய நடிகர் ஸ்டீவ் ஹார்வே கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார். இதனால் முதலில் அரியாத்னாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பின்னர் அதை வாங்கி பியாவுக்கு சூட்டினர்.

கிண்டல்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் நடந்த குழப்பம் பற்றி பலரும் ஸ்டீவ் ஹார்வேவை கிண்டல் செய்தும், திட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் ஸ்டீவ் தனது தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார். பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

லாரா தத்தா
சுஷ்மிதா சென்னை அடுத்து 2000ம் ஆண்டு லாரா தத்தா பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். பட்டம் வென்ற பிறகு சுஷ்மிதாவை போன்றே லாராவும் சினிமா படங்களில் நடிக்க வந்துவிட்டார்.

ஊர்வசி
இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஊர்வசியால் முதல் 15 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை.

15 ஆண்டுகள்
லாரா தத்தாவுக்கு பிறகு 15 ஆண்டுகளாக இந்திய அழகி யாரும் பிரபஞ்ச அழகியாக தேர்வாகவில்லை. தவறாமல் போட்டியில் கலந்து கொண்டாலும் இந்திய அழகிகளால் பட்டம் வெல்ல முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications