கர்நாடகாவின் கார்வாரில் 346 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
கன்னியாகுமரி : கர்நாடக மாநிலம் கார்வார் கடற்பகுதியில் 346 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற ஏராளமான மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து மீட்புப்பணிகள் மேற்கொண்டு வந்தாலும், தங்களது சொந்தங்களைக் காணாததால் மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பத்திரமான உள்ளனர்
அதில், தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவப்படகுகளில் இருந்த 346 மீனவர்கள் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் மீட்கப்பட்டு, தங்கவைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 129 படகுகளில் 1247 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள்
25 தமிழ்நாட்டு மீனவப்படகுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கேரளாவைச் சேர்ந்த 80 படகுகளும், கர்நாடகாவைச் சேர்ந்த 45 படகுகளும் , கோவாவைச் சேர்ந்த 15 படகுகளும் அதில் இருந்த மீனவர்களும் பத்திரமாக ரத்னகிரி பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|
மீட்கப்பட்ட மீனவர்கள்
25 தமிழ்நாட்டு மீனவப்படகுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கேரளாவைச் சேர்ந்த 80 படகுகளும், கர்நாடகாவைச் சேர்ந்த 45 படகுகளும் , கோவாவைச் சேர்ந்த 15 படகுகளும் அதில் இருந்த மீனவர்களும் பத்திரமாக ரத்னகிரி பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|
கடற்படை கப்பல்களில் தேடுதல்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான டோர்னியர் CG 765 விமானம் உட்பட, பல இந்திய கடற்படை கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளது. ICGS சாரதி கப்பல் நேற்று மட்டும் விழிஞ்சம் பகுதியில் 15 மீனவர்களை மீட்டு உள்ளதாகவும், ICGS ஆர்யமான், ICGS அம்ரிதியா, ICGS அபினவ் ஆகிய கப்பல்கள் மூலம் இதுவரை 46 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
|
விரைவில் மீட்கப்படுவார்கள்
தொடர்ந்து அனைத்து குழுக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களைத் தேட மூன்று ICGS கப்பல்களும், ஒரு டோர்னியர் விமானமும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன மீனவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications