மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு.. ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil
மதுரை: மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரவாசல் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரங்கால் மண்டபம் பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்குழுவில் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவில் இருப்பார்கள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தக்குழு தீ விபத்து குறித்து விசாரிக்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications