For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

Google Oneindia Tamil News

ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

Recommended Video

    #வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது PSLV-C53 ராக்கெட்

    பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    ISROs PSLV-C53 set for take-off with 3 satellites of Singapore

    பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் சிங்கப்பூரின் எலக்ட்ரோ ஆப்டிக் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். கடல்சார் பாதுகாப்பு, எண்ணெய் கசிவுகள் கண்டறிதலில் இந்த செயற்கை கோள்களின் பங்களிப்பு முக்கியமானது.

    மேலும் சிங்கப்பூரின் என்இயு சாட், கொரியாவின் ஸ்கூப்-1 ஆகிய செயற்கைக் கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவப்பட உள்ளது.

    EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன? EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன?

    இன்று விண்ணில் பாய்வது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்; ஶ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. தொகுப்பில் 16-வது ராக்கெட் இது.

    பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் பார்க்க முன்பதிவும் செய்யப்பட்டது. இந்த முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.

    English summary
    ISRO's PSLV-C53 will take-off with 3 satellites of Singapore today evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X