திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு, தோட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வாக்குகள் இந்த கல்லூரியில்தான் எண்ணப்பட இருக்கின்றன.
திருச்செங்கோடு அருகே இளையம்பாளையத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதன் மகளிர் கல்லூரியில்தான் நாமக்கல் லோக்சபா தொகுதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

விவேகானந்தா கல்லூரி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் பெற்ற நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இன்றும் 2-வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்செங்கோடு அருகே சிறு மொளசியில் கல்லூரியின் தாளாளர் கருணாநிதி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் தாளாளர் கருணாநிதி, அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications