50 போலி நிறுவனங்கள் மூலம் இமாலய வரி ஏய்ப்பு செய்தது சசிகலா குடும்பம்? விழிபிதுங்கும் விவேக்
போலி நிறுவனங்கள் மூலம் சசிகலா குடும்பம் இமாலய வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: 50 போலி நிறுவனங்கள் மூலம் நாட்டையே அதிரவைக்கும் இமாலய வரி ஏய்ப்பு செய்திருக்கிறது சசிகலா குடும்பம் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். போலி நிறுவனங்கள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருப்பதால் விசாரணை வளையத்தைவிட்டு வெளியே வர முடியாமல் விவேக் விழிபிதுங்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கருப்புப் பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் மடை மாற்றுவதை கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது சசிகலா குடும்பம். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இத்தகைய டுபாக்கூர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டப்பட்டும் இல்லை.

ஏகப்பட்ட வங்கி கணக்குகள்
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏகப்பட்ட போலி நிறுவனங்கள், ஏகப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு நாட்டையே அதிர வைக்கும் இமாலய வரி ஏய்ப்பு செய்திருக்கிறது சசிகலா குடும்பம் என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இது தொடர்பான ஆவணங்கள் பெரும்பாலும் இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில்தான் வசமாக சிக்கி இருக்கின்றன.

பொறியில் சிக்கிய விவேக்
இதனால்தான் கடந்த 5 நாட்களாக இடைவிடாத இருவரது வீட்டையும் அங்குலம் அங்குலமாக முகாம் போட்டு ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். குறிப்பாக சர்ச்சைக்குரிய ஜாஸ் சினிமாஸை வளைத்துப் போட்டதில் தப்பவே முடியாத பொறிக்குள் சிக்கியிருக்கிறாராம் விவேக்.

சிக்கிய கிருஷ்ணபிரியா
ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் விவகாரங்களில் வசமாக சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் விவேக் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். அதேபோல்தான் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வலுவான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

சொத்துகளும் முடக்கம்
தற்போது விசாரணைக்குள்ளாக்கி இருக்கும் 355 பேரையும் நேரில் அழைத்து மிக நீண்ட விசாரணையை நடத்தவும் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம் வருமான வரித்துறை. இந்த விசாரணை முடியும்வரை அனேகமாக அத்தனை சொத்துகளும் முடக்கப்படும் போது சசிகலா குடும்பத்துக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications