ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது: மாஃபா பாண்டியராஜன் வார்னிங்!
ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என ஒபிஎஸ் அணியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் பேச்சுவார்த்தை வெற்றி பெறக்கூடாது என சிலர் முரணான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை வெற்றிபெறக் கூடாது என சிலர் முரணான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.