ஜல்லிக்கட்டு நடைபெறும் என பாஜகவினர் கூறுவது பொய்யானது - மதுரையில் ராமதாஸ் பேட்டி
ஜல்லிக்கட்டு நடைபெறும் என பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என பா.ஜ.க.,வினர் கூறிவருவது பொய்யானது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிவகாசி பாரதி இலக்கிய சங்கம் சார்பில் பெண்கள் சமூக நீதி கருத்தரங்கம் மதுரை இந்திய மருத்துவக் கழக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது: பெண் விடுதலை, சம உரிமைக்காக 35 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும் இன்னும் அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஆண்கள் தலைகுனிய வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். எனவே, போராட தயாராக இருங்கள். பாமக உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றார்.
பாமக மாநில தலைவர் கோ.க.மணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பாமக துணை தலைவர் ம.திலகபாமா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு அழகிய நாயகி அம்மாள், பொன்னம்மாள், ஆவுடையக்காள், மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, குயிலி விருதுகள் வழங்கப்பட்டன. பெண் பாதுகாப்பு குறித்த கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். ஆனால் இது பொய்யானது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. எனவே இந்தாண்டு ஜல்லிக் கட்டு நடைபெறும் என்பது கேள்விக்குறி தான். வங்கிகளில் நிலவும் பணப்பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications