ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு- அவனியாபுரம் நோக்கி 1000 பேர் பயணம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று இளைஞர்கள் எச்சரித்துள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி14ம் தேதி அவனியாபுரம், ஜனவரி15ம் பாலமேடு, ஜனவரி16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர் மாடு பிடி வீரர்கள். ஆனால் தீர்ப்பு உடனடியாக வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறவே, தமிழக மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அலங்காநல்லூரில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால். பதற்றம் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசலை தடுப்பு வைத்து மறைத்த போலீசார், மைதானத்தைச் சுற்றி குவிந்துள்ளனர்.
இதேபோல அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூருக்கு சென்று ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என சென்னை மெரினாவில் மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் ஆக்ரோசத்துடன் கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவனியாபுரம் செல்லவுள்ளதாக கூறியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் அனுமதி கேட்டோம் அவர்கள் தரவில்லை. ஆனால் நாங்கள் தடையை மீறி நாளை ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அவனியாபுரம் பகுதி மக்கள் கூறி வருகின்றனர். வாடிவாசலை தாண்டி சீறிப்பாயுமா? காளைகள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications