8 மாவட்டங்களுக்கு புதிய மா.செக்கள்.. ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: எட்டு மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டச் செயலாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அறிக்கை:

எந்தெந்த மாவட்டங்கள்
காஞ்சீபுரம் மத்தியம், திருவள்ளூர் வடக்கு, வேலூர் புறநகர் கிழக்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களின், மாவட்ட கழக செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

காஞ்சிபுரத்திற்கு சி.வி.என். குமாரசாமி
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக சி.வி.என்.குமாரசாமி (செங்கல்பட்டு நகர கழக செயலாளர்), திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நியமிக்கப்படுகின்றனர்.

வேலூருக்கு என்.ஜி. பார்த்திபன்
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக வி.கோவிந்தராஜ் (மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர், கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நியமிக்கப்படுகின்றனர்.

திருப்பூருக்கு பொள்ளாச்சி ஜெயராமன்
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அ.தி.மு.க.தேர்தல் பிரிவு செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை தலைவர்), கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கணபதி ப.ராஜ்குமார் (வடக்கு மண்டல குழு தலைவர்) நியமிக்கப்படுகின்றனர்.

மீண்டும் தளவாய் சுந்தரம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக என்.தளவாய்சுந்தரம் (முன்னாள் அமைச்சர்), கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஜெங்கின்ஸ் (மாவட்ட இலக்கிய அணி செயலாளர், குமாரபுரம் பேரூராட்சி கழக செயலாளர், பேரூராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications