அமைச்சர் ரமணா வைத்த ராட்சச ஜெயலலிதா பேனர் பஸ் மீது விழுந்து விபத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வாழ்த்தி அமைச்சர் பி.வி.ரமணா வைத்த ராட்சத பேனர் அரசுப் பேருந்து மீது விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை அண்ணா சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையை இன்று ரணகளப்படுத்தி விட்டனர் அதிமுகவினர். ஒரு சாலையையும் விடாமல் அவர்கள் பேனர்களையும், தட்டிகளையும் வைத்து மக்களை நிலை குலைய வைத்து விட்டனர்.

அண்ணா சாலையில் எங்கு பார்த்தாலும் பேனர்கள்தான். அதேபோல ராதாகிருஷ்ணன் சாலை, கடற்கரைச் சாலை என ஒரு சாலையையும் அதிமுகவினர் விட்டு வைக்கவில்லை. வாகனங்கள் சரியாக தெரியாத வகையில் ரோட்டை மறைத்து வைக்கப்பட்ட சாலைகளால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை இன்று அனுபவித்து விட்டனர்.

சட்ட விதிகளுக்குப் புறம்பாக இன்று அத்தனை பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அமைச்சர் பி.வி. ரமணா வைத்திருந்த மிகப் பெரிய ராட்சத பேனரால் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது.

அண்ணா சாலையில் எல்ஐசிக்கு அருகே 60 அடி உயரத்திற்கு ராட்சத பேனரை அமைச்சர் பி.வி.ரமணா வைத்திருந்தார். இந்த பேனர் பாரம் தாங்காமல் அப்படியே சாலையில் சரிந்து விழுந்தது. அது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.

போலீஸார் ராட்சத கிரேனை கொண்டு வந்து விழுந்து கிடந்த பேனரை அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் ஏற்கனவே நிலவிய போக்குவரத்து நெரிசலோடு மேலும் நெரிசலாகி மக்களுக்கு கூடுதல் அவதி ஏற்பட்டு விட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications