அம்மாவுக்காக மக்கள் செய்த பிரார்த்தனை பலனளித்துள்ளது: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்காக மக்கள் செய்த பிரார்த்தனைகள் பலனளித்து வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 42 நாட்கள் ஆகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அவர் குணமடைந்து வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நாட்டு மக்கள் ஜெயலலிதாவுக்காக செய்த பிரார்த்தனைகள் பலனளித்து வருகிறது. மீண்டும் அவர் அரசு பொறுப்பேற்று ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
கைரேகை விவகாரம் சாதாரண ஒன்று. கையெழுத்தை நம்பாமல் கைரேகை முக்கியம் என்று இந்த தொழில்நுட்ப காலத்தில் கூட கூறுகிறார்கள். கைரேகை வைப்பது தொன்றுதொட்டு உள்ள வழக்கம். தேவையில்லாமல் பிரச்சனையாக்குகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications