பதவியேற்ற கையோடு திமுகவின் விளம்பரத்திற்கு பதில் அளித்த ஜெயலலிதா
சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற கையோடு திமுகவின் பிரபல பஞ்ச் வசனமான சொன்னீங்களே, செஞ்சீங்களாவுக்கு பதில் அளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் கூறியது இது தான், சொன்னீங்களே, செஞ்சீங்களா?. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஜெயலலிதா தற்போது மேலும் புதிய வாக்குறுதிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற கையோடு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக கடைகளின் வேலை நேரத்தை குறைப்பது, தாலிக்கு தங்கம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
பிற கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கில் முதல் கையெழுத்து என்று கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவோ, தான் பதவிக்கு வந்தால் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளே அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications