பத்திரிகை பேட்டி எதிரொலி: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் பாஜகவின் சுப்பிரமணியசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்துள்ள சுப்பிரமணியசாமி, இலங்கை பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினைகளில் அவ்வப்போது ஏதாவது கருத்து கூறி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களை சுப்பிரமணியசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், நாளிதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்பிரமணியசாமி அவதூறாக கருத்து தெரிவித்தததாக புகார் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications