For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது: முத்தரசன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி அதிமுகவை தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது என்றும், அதேவேளையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 Jayalalitha loss Thought to adopt party is not political civilization: CPI Mutharasan

இதுதொடர்பாக, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

ஜெயலலிதா இறந்தது அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு ஆகும் என்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தார். திடமான நடவடிக்கைகளால் அவர் பெயர் எடுத்தார்.

அவரது உடல் நிலை குறித்தும், மரணம் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆதாரம் இன்றி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது''என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
one can thought to adopt party using Jayalalitha loss is not political civilization CPI Tamilnadu state secretary muttarasan says while speaking with repoters here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X