அபாய கட்டத்தை தாண்டி விட்டார் ஜெயலலிதா....: பொன்னையன் ஆறுதல் தகவல்
முதல்வர் ஜெயலலிதா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நுரையீரல் தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். கடந்த 44 நாட்களாக அவர் சிகிச்சையில் இருப்பதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில், ''முதல்வர் தற்போது பேசுகிறார். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது'' என்று தெரிவித்து இருந்தது.

தினசரியும், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசி வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் இன்று சி. பொன்னையன் பேசினார். அப்போது அவர், ''அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வருக்கு நுரையீரல் தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். நன்றாக சுவாசிக்கிறார் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அவர் கஞ்சி உணவு சாப்பிட்டு வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிப்பவர்களுடன் தற்போது பேசி வருகிறார் என்று அதிமுக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் கூறியுள்ளது அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications