For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடநாட்டில் இருந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 24ம்தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த ஜெயலலிதா, 25ம்தேதி தலைமைச் செயலகத்துக்கு வந்து அரசு பணிகளை ஆரம்பித்தார். பின்னர் தேர்தல் பிரச்சார களைப்பு நீங்க 27ம்தேதி நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைப்பிரதேசமான கொடநாட்டுக்கு சென்றார். அங்கிருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Jayalalithaa set to return Chennai

சுமார் இரு வாரங்கள் ஓய்வெடுத்துள்ள நிலையில், வரும் 16ம்தேதி வாக்குகள் எண்ணப்படும் முன்பாக அவர் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 14 அல்லது 15ம்தேதியில் அவர் கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புவார் என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

English summary
Aiadmk general secretary and Chief minister of Tamilnadu,Jayalalithaa set to return to Chennai from Kodanadu where she has been staying fom april 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X