நானும் ஒரு நர்ஸும்மா.. உள்ளே கொஞ்சம் விடுங்கம்மா.. ஜூலியை தடுத்து நிறுத்திய போலீஸ்!
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிக்பாஸ் ஜூலிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
Recommended Video

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஜூலிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

தலைவர்கள் வருகை
ஆனால் மற்றொரு பிரிவினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் ஜூலி வந்தார்
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள பிக்பாஸ் ஜூலி டிஎம்எஸ் அலுவலகத்துக்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

நானும் ஒரு நர்ஸ்தானே
ஆனால் அவர் தானும் ஒரு நர்ஸ் என்பதால் போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளதாக போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்குப் பிறகு வேற ஜூலி
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து பிரபலமடைந்தார் ஜூலி. ஆனால் அது எல்லாவற்றையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
வேண்டாம் வேண்டாம்..ஜூலி வேண்டாம்.. ஒரு வேளை ஜூலி உள்ளே போயிருந்தா செவிலியர்கள் இப்படிப் போராட நேரிட்டிருக்குமோ!












Click it and Unblock the Notifications