பிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு!
பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை ஆஜராக விலக்கு கோரியும் கலாநிதி மாறன் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சனோதரரின் சன் குழும நிறுவனத்திற்கு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக குருமூர்த்தி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007ம் ஆண்டில் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், துணை பொது மேலாளர் எம்பி வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி ஊழியர் ரவி, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.
பிஎஸ்என்எல் வழக்கில் கடந்த ஜூலை மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று முதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கில் இருந்து வழக்கு விசாரணைக்காக தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி கலாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கலாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கலாநிதி மாறன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications