பிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு!
பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை ஆஜராக விலக்கு கோரியும் கலாநிதி மாறன் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சனோதரரின் சன் குழும நிறுவனத்திற்கு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக குருமூர்த்தி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007ம் ஆண்டில் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், துணை பொது மேலாளர் எம்பி வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி ஊழியர் ரவி, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.
பிஎஸ்என்எல் வழக்கில் கடந்த ஜூலை மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று முதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கில் இருந்து வழக்கு விசாரணைக்காக தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி கலாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கலாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கலாநிதி மாறன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications